Monday, February 22, 2010

ஒலிகளின் தூவானம்.


ஒரு மழை, ஒரு வெளி, ஓர் பார்வை..

ஏகாந்த வேளை
எதையும் இசைக்க முடியாதிருந்தது....

இசைத்து வெகுநாட்களான
என் கித்தாரை போன்று
மீள்தன்மை கொண்டதாக -என்னால்
இருக்க முடிவதில்லை...

தாய்,சேய் ராகங்களை இணைத்தாயிற்று.
சிம்பொனிகளை இசைத்தாயிற்று ...
வெறும் கூட்டிசையில் விருப்பமில்லை....

மழையின் பேரிரைச்சல்
எதையோ யாரிடமோ சொல்லிக்கொண்டிருந்தன...

உணர்வுகளின் பகுமானி
ஒலிகளை அளக்கையில்
இம்மௌனத்தை இசைப்பதெனில்
ஸ்வரங்களின் நீட்சி அவசியமாகிறது..

விகிதாச்சாரம் மட்டுமே வேறுவேறு
மற்றபடி
போதையென்பது
தன் மையத்திலிருந்து
நம்மை இயக்குமெனில்
இசையும் போதையென்பதில் சந்தேகமில்லை...

இசையின் உருவடிவம்
மொழியெனில்
வார்த்தையை விட போதையானது
யாதொன்றுமில்லை....

தூறல் நின்றிருந்த நேரம்
வார்த்தையை மேலும் பகுத்தறிவதில்
பிரக்ஞையில்லை

மழைநனைகூரையிலிருந்து நீரில்விழுந்த
இறுதிச்சொட்டின் 'ஒலியானது'..
"இசையானது"..