Monday, March 1, 2010

அசிரீரிகளின் குரல்வளை



எப்போதும் ஒரு பயம்
இருந்து கொண்டேயிருக்கிறது...

என் வானத்தில்
அவை அசிரீரிகளை உருவாக்கின...

கருமேகங்களை உடலாய் கொண்டு
என் கண்முன்னே
விஸ்வரூபக் களிநர்த்தனம் ஆடின...

ஓங்கி ஓங்கி ஒலித்த
அசிரீரிகளின் குரல்வளை
தப்பிக்க முடியாததொரு மூலையில்
நிற்க நிர்ப்பந்தித்த போது
என்னுடையவை
பூனையின் செயலாகத்தான் இருந்தன.....

பிறகு
எல்லோருடைய வானத்திலும்
அசிரீரிகள் கேட்கத் துவங்கின...