Friday, August 5, 2011

போகிற போக்கில் 
சொல்லிவிட்டு போகிறாய் 

நான்தான் 
நின்ற இடத்திலேயே 
நின்று கொண்டிருக்கிறேன்...
முன்பொரு நாள் 
ஒரு மழைகாலத்தில் 
உன்னை சந்திக்கவே விரும்பினேன் 

மழை வெயிலென 
மாறி மாறி 
வாழ்கையானாய் 
ஏதோ எழுதியபடி 
மேஜையில் அமர்ந்து 
உறங்கி விடுகிறேன்...

எதுவும் எழுதாத 
தாளோடும் பொழுதோடும் 
அமர்ந்திருக்கிறாய் நீ ,.
அணைத்து கிடப்பவனை 
முனகிக் கொண்டே 
மெல்ல விலகி படுக்கிறாய்....

கெஞ்சி கெஞ்சி 
கேட்ட பின்னும் 
இரவை பகலாக்குகிறாய் 
இந்தக்கணம் நீ கேட்கையில் 
சொல்வதற்கு ஏதுமில்லை 

முன்பொரு நாள் 
அவ்வளவு அழகாய் இருந்தாய் 

நான் சொல்லவுமில்லை....
விழுந்துவிட்டேனென நினைத்து 
சமையலறையிலிருந்து 
பதறி வருகிறாய் ...

உடைந்த உன்னை மட்டும் 
எதைக் கொண்டு அள்ளுவதென
புரியாமல் நிற்கிறேன் 
உடைத்தது யாரென தெரியவில்லை 
இறைந்து கிடக்கிறது பகல்.

யாரோ ஒருவனான -என்னை 
கடந்து போகிறாய் நீ