Friday, October 7, 2011

தனிமையில்.....

இந்த விடைபெறுதலில்
நான் சொன்ன எதையுமே
பூட்டி வைப்பதில்லை நீ.....

பின்னாளில்
திறக்கும் யாவற்றிலிருந்தும்
வெளிவரும் அதே வார்த்தைகளை
தயங்கி பின் படர்கிறாய்...

உன்னால் அசைகிறது 
திரைச்சீலை 
உன்னாலே மிகுகிறது
சுடர்....


அசைவதும் மிகுவதுமாக இருக்கிறது
மௌனம்.......