Saturday, October 17, 2009

வாழ்தலென்பது ஆலகாலவிஷம்

உன் முந்தைய காதலொன்றின்
புலம்பெயர் இதயத்தினை விமர்சித்தபடி
முடிவென்பதாக ஒன்றை சொல்லி போகிறாய் ...
உன் பார்வை திரும்பலாம் என்னும் காலம்வரை
ஒருபோதும் நான் உயிர்த்திருக்க போவதில்லை ...
மிகையில்லா அன்பின் வீச்சினில் நனையாதிருக்கும்
எம்மில் யாருமே ஒரு முத்தத்தை
சரியாக வரையறுக்கவில்லை....
என்னை எங்கிருந்து தொடங்குவதென்பதை
இன்னும் நான் அறியாதிருக்கிறேன் ....
நீளுமிவ்விரவின் அழகை புணர்கையில்
வாழ்தலென்பது அவசியமாகப்படுவதும்
நீட்டும் கரங்களோடு சுற்றங்கள் புன்னகைக்கையில்
வாழ்தலென்பது அவசியமாக்கப்பட்டதும்
கோர்க்கவியலா சுரங்களுக்காக விரலெடுத்து
பியானோவின்முன் வெறுமனே அமர்ந்தபடி
முடிவன்பதாக ஒன்றை சொல்லி போகிறேன்......

2 comments:

  1. வேறெதுவும் சொல்ல தெரியல..வாழ்தலென்பது ஆலகாலவிஷம்..அவ்ளோதான்.. :))

    ReplyDelete
  2. உன் பார்வை திரும்பலாம் என்னும் காலம்வரை
    ஒருபோதும் நான் உயிர்த்திருக்க போவதில்லை///


    நித்ர்சன வரிகள்!!

    ReplyDelete