Saturday, March 12, 2011

வெற்றிடத்தில் வாழும் சிறகுகள்....



தொடங்காத பிறைகளென
ஆவல் சிறிதுமில்லை...


சொல்லாடா பொழுதின் கிளையை
இறக்கைகள் படபடக்க
இன்னும் இறுக பற்றினேன்....


மாண்பை அடுக்கிய பரணில்
வார்த்தைகளற்ற வாசமே மீந்தன...


உளறத் தெரியாத சாமரம்
பழகாத காற்றை நிறுத்தன...


நீரோட்டத்தில் விழுந்த பொருளென
போகிறது மௌனம்..
கரையொதுங்கிய மலரோ பொருளோ
கையோடு நதியை எடுத்து வருவதில்லை....


தனித்து விடப்பட்ட ஒரு சிறகுக்கு
அலைவுறத் தெரிந்திருக்கிறது
என்பதொன்றும் பெரிதில்லை....


யாரும் இயங்காத வெளியில்
வீழ்படிவாகும் இவ்வொலி
யாருடையதுமில்லாத போது


உன் இருத்தல் மட்டுமேயுள்ள..
வார்த்தைகளின் சுழலா உலகில்
உள்ளீடற்றவையை திறந்து பார்ப்பதில்
என்ன இருக்கிறது??

No comments:

Post a Comment