Sunday, December 25, 2011

ஊறிய உடலென மிதக்கும் சொல்


====================================
அறைந்து சாத்தப்பட்ட
அறையின் நிறங்களில்
பொழுதுகளை தேடுகிறேன்

என் கோப்பையில்
ஊறிய உடலென
மிதக்கும் சொல்லோடு
தொடங்குகிறது தனிமை

நன்மையிலிருந்து தேக்கவும்
தீமையிலிருந்து விலக்கவுமான
காமத்திற்க்கான கடவுள்சொல்லை

அருகில் அமர்ந்து
பருக தொடங்குகிறது
காற்றை போலிருக்கும்
உன் ஒளி மாய உடல்

கசங்கிய தாள்களென
இறைந்து கிடக்கிறது
உன்னை தேடும்
கரங்களின் சொற்கள்

அயர மறுக்கும் கண்கள்
சொல்லை போல் இருக்கும்
துயர உடலை
குடித்துவிட்டு வைக்கிறது
காலி அறையை ...
 — 

No comments:

Post a Comment