Saturday, December 24, 2011

கான்கிரீட் கவிதைகள் -5


தகர ஷீட்டுகளில்
அறைந்து பெய்யும் மழையில்
பாலிதீன் கூடாரங்களுக்கு உள்ளே
சன்னமாய் தேய்ந்து ஒலிக்கிறது
கல்தச்சரின் முனகல் உளி.

மௌனத்தின் கூடாரங்களில்
கூரையற்ற ஒரு உலகம்
நடுங்குகிறது..
 — 

No comments:

Post a Comment