Saturday, March 12, 2011

மெய்மையின் நிறப்பிரிகை...



நானென் வரிகளை


முகத்தின் பிம்பங்களால் எழுதுகிறேன்....






சூன்யத்தின் நகலென விளங்கும் என் முகம்


ஒரு விதையாகவுமிருக்கலாம்....






கண்ணாடியை சொல்லி குற்றமில்லை...


தளம் மாற மாற


நிறம் மாறிக்கொண்டே இருக்கிறது






ஆதிக்கிழக்கின் முதல் கீற்றிலிருந்து


வெள்ளொளியை நம்பி திரிந்தோம் நாம்






எனினும் என்னுடையதைவிட


என் பிள்ளையின் வாள்


கூராயிருக்கிறது....






புரிவதற்குள் கடந்துவிடும் வினைகளால்


அடுத்த வினாடிகள்


கானல் திரைக்குள்ளிருக்கும்






எந்த வரையறையும் நிலையற்றதென....


நிலத்தை நீரும்


நீரை தீயும்


தீயை நீருமென...


ஒரு மெய்யிலிருந்து கைநழுவி


மறு மெய்யை பற்றிகொள்ளும்


அமானுஷ்யமிருக்கையில்






இது என் நிறமென


இதுதான் என் முகமென


எப்படி நம்புவது??

1 comment: