Saturday, December 24, 2011

கான்கிரீட் கவிதைகள் -4


கைப்பிடிச் சுவரில்லாத
ஐந்தாவது மாடியின் விளிம்பில்
நின்று எட்டி பார்க்கிறது
எதையாவது
பற்றிக்கொள்ள துடிக்கும் வாழ்வு

மழையில் நனைகிறது
தார்பாய்க்கு வெளியே
கால்நீட்டி உறங்குகிற
எனக்கும் உனக்குமுள்ள உறவு ...

கட்டி முடித்து
இவ்வளவு உயர வித்தியாசத்தை
அண்ணாந்து பார்ப்பவனை நோக்கி
சாயத் துவங்குகிறது கட்டிடம்
 

No comments:

Post a Comment