Saturday, December 24, 2011

அழுந்தி துடிக்கும் இமைகளின் பாதரச கனவுகள்


உறங்கும் தொலைவு வரை
கூடவே வந்துவிட்டு திரும்பவென
கெஞ்சி நிற்கும் உன் மௌனம்
ஒரு துயர்மிகு இசை

ஓர் வார்த்தையுமற்ற உன்னை
வெறுமனே புரட்ட துவங்குகையில்

மேலும் ஒருமுறை
உதறி விரித்து போடுகிறேன்
இந்த இரவை ...

ரயில் சினேஹிதத்தை போன்ற
நேற்றைய இரவை
நினைத்து பார்க்கையில்

மேலும் ஒருமுறை
உயர்த்தி காட்டுகிறேன்
தனிமையின் கோப்பையை ....
 

No comments:

Post a Comment