Friday, August 7, 2009

"சாம்பல் கசிகிறது பாடலாய்"

காற்றில் கசிந்துருகிய
காதலின் பாடலை
எரித்து சாம்பலாக்கி
இருகைகளில் ஏந்தி
ஓடிக்கொண்டிருக்கும் நான் மற்றும்.....

ஓர் அழகான பாடலை
எரித்துவிட்ட உறுத்தலோடு
ஓடுபவனின் தன்மையறியாது
கூர்வாளினை
கையில் ஏந்தியபடி
விடாது துரத்தும் நிலவு....

ஓர் இருள்வெளியில்
மடக்கி பிடித்து
தொண்டையில் வாளேற்றி
பற்கள் காட்டி சிரித்தபோது
ஒரு பீநிக்சை போல்
சாம்பல் கசிகிறது பாடலாய்....

No comments:

Post a Comment