Friday, August 7, 2009

"கண்ணீரின் சாவி"

Tears And Painதத்துவத்தின் சாவி
குழந்தைகளின் கேள்விகள்
என்றறிந்த போது
கண்ணீரின் சாவி
எதுவாயிருக்குமென சிந்தித்திருந்தேன்..!

இரத்தவெறி கொண்ட
கொடியோனின் பெருங்கரங்கள்
என் கழுத்தை நெரித்தபோது
நிறைமாத கர்ப்பிணியாய்
செய்வதறியாது நின்றாய்...

பிறகொரு நாள்
நீயும் அவனோடு சேர்ந்துகொண்டு
கண்கள் முதலான
புலனுறுப்புகளைத் தின்ன பழக்கினாய்...!

உன்
கோரைப் பற்களாலும்
கூர் நகங்களாலும்
பாலுறுப்புகளையும் அறுத்து
தின்ன கொடுத்தபோது
உடலெங்கும் புழுக்களாய் நெளிய
நானென் சுயத்தை இழந்திருந்தேன்...!

கடைசியாக.....
வேகு வேகேன்ற
மூச்சிரைச்சலோடு ஓடிவந்து
துடித்துதிமிறிய ஒரு இதயத்தை
கையிலேந்தி தின்னகொடுத்தாய்...!

அவசரமாய் விழுங்கி
அடிஉதட்டில் உயிர்ஒழுக
அலறி விழுந்தவனின் சடலத்தை
மிச்சமில்லாமல் தின்றுவிட்டு
பாடலொன்றை பிரசவித்து
ரணக்குரலெடுத்து அழுதிருந்தாய்...!

No comments:

Post a Comment