Friday, August 7, 2009

நிலவென வாழ்வதும்....! கதிரென பொழிவதும்.....!

ஆழ்ந்து அகன்ற நுண்ணியமாய்
பாட்டெழுதி பெரிதுஉவந்துகொண்ட
ஒரு பொழுதில்
பொருளற்ற பாட்டெழுதி
குழிந்த கன்னங்களில்
சுழியிட்டு சிரிதிருந்தாய்....!

யாருமற்றதோர் பெருவெளியில்
எதுமற்றதோர் திசைநோக்கி
நானுமற்றதோர் காதலில்
அக்ரினயென வெறித்தவாறு
ஏகாந்தத்தன்னிலிருந்தாய்

மதனோற்சவம் நிகழ்ந்தேறிய
ஒரு பொழுதில்
நெடுநாட்களுக்கு பிறகான
சிறு பிரிவொன்றை சிந்தித்திருந்தாய்....!

காற்றும் பெரும்புயலும்
சூழ்க சூழ்கவென்றிருந்த
ஒரு ஊடல் பொழுதில்
ஒரு நீர்க்குமிழி ஏந்தியதாய்
களைப்புற்றிருந்தாய்.....

எவ்வளவு அழகாய்
காதலிதிருக்கிறாய் என்னை நீ...

நானென்றும்....
என்காதலென்றும்...
உணர்வுகளென்றும்....வலிகளென்றும்......
சொல்லியிராத ஒரு பாடலை
எழுதியபோதுதான் அறிந்தேன்..
நிலவென வாழ்வதும்....!
கதிரென பொழிவதும்.....!

No comments:

Post a Comment